tag:blogger.com,1999:blog-26476373562714956042024-02-08T17:25:50.721+05:30VALLALAR RADIORadio blog for Thiruvarutpa songsUnknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2647637356271495604.post-31330200905118997292018-06-29T10:21:00.003+05:302018-06-29T10:21:43.147+05:30ஞான சரியை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: center;">
{1} </div>
<div style="text-align: center;">
<br />
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே<br />
நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு<br />
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான<br />
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று<br />
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்<br />
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்<br />
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்<br />
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/PQHeLd9XIoE" width="400"></iframe> <br />
<br />
<br />
{2}<br />
<br />
புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்<br />
புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்<br />
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்<br />
உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே<br />
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் தேனே<br />
மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே<br />
தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே<br />
சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/2_qh4yf3Iuw" width="400"></iframe> <br />
<br />
<br />
{3}<br />
<br />
பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்<br />
பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே<br />
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே<br />
துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்<br />
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க<br />
சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று<br />
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே<br />
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/BiPk1rpqbbg" width="400"></iframe> <br />
<br />
<br />
{4}<br />
<br />
கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே<br />
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே<br />
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே<br />
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே<br />
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க<br />
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே<br />
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்<br />
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/cO0vCcBtGuY" width="400"></iframe><br />
<br />
<br />
{5}<br />
<br />
இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்<br />
எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்<br />
அன்புடையீர் வம்மின் இங்கே சமரசசன் மார்க்கம்<br />
அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்<br />
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான<br />
பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே<br />
வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்<br />
மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/lZeo9MK6jBg" width="400"></iframe> <br />
<br />
<br />
{6}<br />
<br />
தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்<br />
சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை<br />
ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்<br />
அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோ தியைஓர்<br />
ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த<br />
ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை<br />
நாமருவி இறவாத நலம்பெறலாம் உலகீர்<br />
நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/iMsorpx20YA" width="400"></iframe> <br />
<br />
<br />
{7}<br />
<br />
நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ<br />
நெடுமொழியே உரைப்பன் அன்றிக் கொடுமொழிசொல் வேனோ<br />
சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித்<br />
தனித்தபெருஞ் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்<br />
சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்<br />
சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த<br />
ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்<br />
உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/Vq45XyscZQw" width="400"></iframe> <br />
<br />
<br />
{8}<br />
<br />
விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே<br />
மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்<br />
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்<br />
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய<br />
வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே<br />
வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர்<br />
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களில்நீர் பெருகிக்<br />
கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/FV450ncQEco" width="400"></iframe> <br />
<br />
<br />
{9}<br />
<br />
களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்<br />
களிப்படைய அருட்ஜோதிக் கடவுள்வரு தருணம்<br />
தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே<br />
செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்<br />
ஒளித்துரைக்கின்றேன் அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்<br />
ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்<br />
அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே<br />
ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடையீரே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/g8Uf1ZPORS0" width="400"></iframe><br />
<br />
<br />
{10}<br />
<br />
ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்ஜோதிப் பெருமான்<br />
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்<br />
ஏசறநீத் தெனை ஆட்கொண் டெண்ணியவா றளித்தான்<br />
எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்<br />
தேசுடைய பொதுவில்அருள் திருநடனம் புரியத்<br />
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே<br />
மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்<br />
முக்காலத் தினும்அழியா மூர்த்தம் அடைந் திடவே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/bVNXkjdZ3CA" width="400"></iframe><br />
<br />
<br />
{11}<br />
<br />
அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்<br />
அருட்ஜோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்<br />
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே<br />
காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்<br />
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்<br />
யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்<br />
உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா<br />
ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/GXYk_WGKvEo" width="400"></iframe><br />
<br />
<br />
{12}<br />
<br />
திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்<br />
சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு<br />
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து<br />
வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்<br />
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்<br />
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே<br />
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்<br />
கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/2ygEiQKdefw" width="400"></iframe><br />
<br />
<br />
{13}<br />
<br />
உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்<br />
உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்<br />
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்<br />
என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்<br />
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்<br />
சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்<br />
கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்<br />
கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/oiZkd-7GDWA" width="400"></iframe><br />
<br />
<br />
{14}<br />
<br />
தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்<br />
தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை<br />
வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே<br />
வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்<br />
தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்<br />
சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர்<br />
ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்<br />
உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/Fkz5ecwE3X0" width="400"></iframe> <br />
<br />
<br />
{15}<br />
<br />
சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம்<br />
தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்<br />
நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்<br />
நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை<br />
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்<br />
ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்<br />
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்<br />
சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/iU4inXBZWBo" width="400"></iframe> <br />
<br />
<br />
{16}<br />
<br />
நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை<br />
நிலையனைத்தும் காட்டிஅருள் நிலைஅளித்த குருவை<br />
எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை<br />
என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை<br />
சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்<br />
செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்<br />
முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண<br />
முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/QPhvo-iOMLQ" width="400"></iframe> <br />
<br />
<br />
{17}<br />
<br />
முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்<br />
முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே<br />
இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்<br />
எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்<br />
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்<br />
தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்<br />
பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்<br />
படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/I7106cq0_LE" width="400"></iframe><br />
<br />
<br />
{18}<br />
<br />
சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்<br />
சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே<br />
இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீது<br />
என்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ<br />
அகமறியீர் அனகமறிந் தழியாத ஞான<br />
அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே<br />
முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ<br />
முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/OXeesGJK4pI" width="400"></iframe><br />
<br />
<br />
{19}<br />
<br />
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்தன் வார்த்தை<br />
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே<br />
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்<br />
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்கள்எலாம் பெறவே<br />
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்<br />
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்<br />
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்<br />
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/w1EfKLZ5A6M" width="400"></iframe><br />
<br />
<br />
{20}<br />
<br />
குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்<br />
கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்<br />
வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது<br />
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்<br />
பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்<br />
புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்<br />
செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்<br />
சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/tdZJpekfhKQ" width="400"></iframe><br />
<br />
<br />
{21}<br />
<br />
சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்<br />
திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்<br />
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்<br />
உலகம்எலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே<br />
வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ<br />
மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா<br />
சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்<br />
தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/gbN3Vs7QClM" width="400"></iframe><br />
<br />
<br />
{22}<br />
<br />
செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்<br />
திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை<br />
மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்<br />
மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்<br />
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்<br />
மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்<br />
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே<br />
புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/kGhmpLt47q0" width="400"></iframe><br />
<br />
<br />
{23}<br />
<br />
பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்<br />
புகலுவதென் நாள்தொறுநும் புந்தியிற்கண் டதுவே<br />
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே<br />
மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே<br />
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்<br />
பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே<br />
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை<br />
அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/kBZaz1m0oT8" width="400"></iframe><br />
<br />
<br />
{24}<br />
<br />
மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்<br />
மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ<br />
சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே<br />
சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள் அல்லால் அதனை<br />
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்<br />
இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்<br />
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்<br />
பலப்பற்றே பற்றுமினோ என்றும்இற வீரே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/ghOYya20SBs" width="400"></iframe><br />
<br />
<br />
{25}<br />
<br />
இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்<br />
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்<br />
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு<br />
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்<br />
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்<br />
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே<br />
பிறந்தபிறப் பிதில்தானே நித்தியமெய் வாழ்வு<br />
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/47oUbBh8fMM" width="400"></iframe><br />
<br />
<br />
{26}<br />
<br />
உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே<br />
உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்<br />
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்<br />
கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ<br />
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது<br />
தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்<br />
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடுசேர்ந் திடுமின்<br />
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/vIQ7turFFfg" width="400"></iframe><br />
<br />
<br />
{27}<br />
<br />
சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்<br />
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை<br />
நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்கம்<br />
நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்<br />
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான<br />
பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை<br />
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்<br />
அருட்பெருஞ்ஜோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/0iGKIL5YxxM" width="400"></iframe><br />
<br />
<br />
{28}<br />
<br />
சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே<br />
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை<br />
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்<br />
நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி<br />
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை<br />
எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை<br />
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்<br />
உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="60" src="https://www.youtube.com/embed/NYq9lxPHObM" width="400"></iframe><br />
<br />
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2647637356271495604.post-12989545689836773842008-02-17T09:51:00.001+05:302012-03-31T21:16:24.285+05:30ARUTPERUNJOTHI MAHAMANDIRAM - அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம்<iframe width="350" height="60" src="http://www.youtube.com/embed/FCu6eCczRqc" frameborder="0" allowfullscreen></iframe>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2647637356271495604.post-71116880308172294912008-02-17T09:42:00.000+05:302012-03-31T21:16:48.818+05:30ELLAM SEYAL KOODUM - எல்லாம் செயல் கூடும்<iframe width="350" height="60" src="http://www.youtube.com/embed/-8W-kzqJICc" frameborder="0" allowfullscreen></iframe>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2647637356271495604.post-18331969529666871212008-02-17T09:38:00.000+05:302012-03-31T21:17:17.106+05:30THIRUVILANGA SIVAYOGA - திருவிளங்க சிவயோக<iframe width="350" height="60" src="http://www.youtube.com/embed/kiYbAY3DDYg" frameborder="0" allowfullscreen></iframe>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2647637356271495604.post-57365168028466028842008-02-17T09:18:00.000+05:302012-03-31T21:15:56.252+05:30ANBENUM PIDIYUNUL - அன்பெனும் பிடியுனுள்<iframe width="350" height="60" src="http://www.youtube.com/embed/TMAC7ve9DUA" frameborder="0" allowfullscreen></iframe>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2647637356271495604.post-36955563787108547882008-02-17T05:23:00.001+05:302012-03-31T21:17:51.047+05:30NALLOR MANADHAI NADUNGA - நல்லோர் மனதை நடுங்க<iframe width="350" height="60" src="http://www.youtube.com/embed/bYTnbd9Mz9Y" frameborder="0" allowfullscreen></iframe>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2647637356271495604.post-58299789640986964052008-02-17T05:22:00.001+05:302012-03-31T21:18:27.736+05:30ABAYAM ABAYAM - அபயம் அபயம்<iframe width="350" height="60" src="http://www.youtube.com/embed/T3ecjVBuTqY" frameborder="0" allowfullscreen></iframe>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2647637356271495604.post-29895554070693763412008-02-17T05:21:00.001+05:302012-03-31T21:18:52.996+05:30VARUVAR AZHAITHU VAADI - வருவார் அழைத்து வாடி<iframe width="350" height="60" src="http://www.youtube.com/embed/Qzh2d6RryYE" frameborder="0" allowfullscreen></iframe>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2647637356271495604.post-43836161975155764802008-02-17T05:17:00.000+05:302012-03-31T21:19:39.235+05:30JOTHI JOTHI JOTHI SUYAM - ஜோதி ஜோதி ஜோதி சுயம்<iframe width="350" height="60" src="http://www.youtube.com/embed/QjjtFK2SKmA" frameborder="0" allowfullscreen></iframe>Unknownnoreply@blogger.com